என் இனிய வாசகர்களே….
உங்களை மகிழ்விக்கும் விதமாக, எனக்கு வந்த குறுந் தகவல் நகைச்சுவைகளை எனது செல்பேசியில் வைத்திருந்தேன். ஆனால், ஏதோ ஒரு ஜந்து ( திருடனை அப்படிதான் சொல்லணும்) அதை ஆட்டையை போட்டு விட்டது.
ஆனாலும் இந்த சிங்கத்தின் சீற்றம் ஓயாது. முடிந்தவரை தொடர்ந்து, நகைச்சுவைகளை பதிவு செய்து கொண்டே இருப்பேன்.
இப்போதைக்கு ஒரு தத்துவம் சொல்ல ஆசைப் படுறேன்.
நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒண்ணும் கெட்டவன் இல்லை. அதே போல, நான் கெட்டவன்னு உண்மைய ஒத்துக்க நான் ஒண்ணும் நல்லவன் இல்லை. இப்படிக்கு, நான் அவன் இல்லை
இது தத்துவமான்னு நீங்க திட்டறது என்னோட mind voice ல கேக்குது.
எனக்கு வந்த குறுந் தகவல் இது.
